Saturday, October 02, 2004

அ(ல்லாஹ்)வனே அனைத்துக்கும் சொந்தக்காரன்.

6:162. (நபியே) (தூதரே) நீர் கூறும்: என்னுடைய
தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும்,
(அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய
மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. "அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக்
கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு)
வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான்
முதன்மையானவன் (என்றும் கூறும்)

6:164. அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான்
இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப்
பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் -
பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை
தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை
மற்றோர் ஆத்மா சுமக்காது.
பின்னர் நீங்கள் (அனைவரும்)
உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல
வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம்
செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு
அறிவிப்பான் என்று (நபியே) நீர் கூறும்.

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக
ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில்
உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை
விடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம்
இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன்
நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்.
அல் குர்ஆன்: அல் அன்ஆம்(கால்நடைகள்)